April 18, 2026

ரமலான் சிறப்பு நிகழ்சிகள்

நமது இஸ்லாமிய தஃவா சென்டர் தொடர்ச்சியாக மேற் கொன்டு வரும் பணிகளில் புனித ரமலான் சிறப்பு நிகழ்சிகளும் முக்கியமானதாகும்.

நமது இஸ்லாமிய தஃவா சென்டர் கடந்த 6 ஆண்டுகளாக குவைத் மாநகரில் ரியாளுல் ஜன்னா எனும் பெயரில் அழகிய கூடாரம் அமைத்து சிறப்பான முறையில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இஃப்தார் ஏற்பாடுகள்

நபி வழியில் இரவு தொழுகைகள்

செவிக்கு சுவையாய் சிந்தைக்கு விருந்தாய் சொற்பொழிவுகள்

குரான் ஓத பயிற்சிகள்

இஸ்லாமிய ஒழுக்கங்கள்

என ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறன்றது..

இந்த சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பிக்க சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இறுதி பத்து தினங்களிலும் இன்னும் பல சிறப்பம்சங்களுடன்…

இரவு சரியாக 11:30 மணிக்கு துவங்கி அதிகாலை மூன்று மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முதலில் 15 நிமிடங்கள் 2ரக்அத் தொழுகை

அடுத்து 30 நிமிடங்கள் குரான் ஓத பயிற்சி

அதை தொடர்ந்து மீண்டும் 2 ரக்அத் தொழுகை

பின்னர் ஒரு மணிநேரம் குரான் விளக்கவுரை

அதை தொடர்ந்து மீண்டும் 2 ரக்அத் தொழுகை

பின்னர் 15 நிமிடங்கள் பிரார்த்தனை நேரம்

அதை தொடர்ந்து மீண்டும் 2 ரக்அத் மற்றும் வித்ரு தொழுகை

பின்னர் ஸஹர் உணவுடன் நமது நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும்.

2004ஆம் ஆண்டு நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இலங்கை மவ்லவி இஸ்மாயீல் ஸலபி

2005 ஆம் ஆண்டு நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சவூதியில் தாயியாக இருந்த மவ்லவி அலி அக்பர் உமரி

2006 ஆம் ஆண்டு நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் மவ்லவி முஹைதீன் உலவி

2007 ஆம் ஆண்டு நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சகோதரர் மவ்லவி நிலாமுதீன் அஷ்ரஃபி

2008 ஆம் ஆண்டு நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மவ்லவி இப்ராஹீம் மன்பயீ மற்றும் சகோ. கோவை அய்யூப்.

2009 ஆம் ஆண்டு நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சவூதியில் தாயியாக பல ஆண்டுகள் பணிபுரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த மவ்லவி பிஸ்மில்லாஹ் கான் பைஜி மற்றும் சையத் முஹம்மது மதனி, முதல்வர் ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா.

2010 ஆம் ஆண்டு நமது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி